Blogger indli vote button

Saturday, October 15, 2011

"அம்புலி 3D" திரைப்பட அனுபவங்கள் -  பகுதி 05
                                                         



இசையின் உண்மையான முகத்தை அப்பொழுது இரண்டு இயக்குனர்களும் எடுத்துரைக்க....ஒரு நாள் இசை ஞானம் எனக்குள்ளும் வரும் என்ற நம்பிக்கை நாளாக நாளாக வளர ஆரம்பித்தது. கரிக்கடை பாய் வீட்டுக்கு பக்கத்து வீட்ல இருந்து நான் என் வீட்டை காலிப் பண்ணிட்டேன். ( அட அதாங்க என் IPOD -ல இருந்த குத்துப் பாடல்களையும்
HERO Introduction பாடல்களையும் Delete செய்து விட்டேன்.)



அடுத்த கட்ட தேர்தல்

அதே Location hunt trip -ல் அம்புலியில் எனக்கான வேலைப் பற்றியும் மற்ற Asst Directors -க்கிட்ட எப்படி வேலையைப் பிரித்து கொடுத்து Supervising செய்வது பற்றியும் எனக்கு சொல்லிக் கொடுக்கப் பட்டது.

அதாவது Leading post -ல் இருப்பவர் எப்படி வேலைகளை முந்திக்கொண்டு செய்வது என்று ஆழியார் அணைக்கு Location பார்க்க செல்லும்பொழுது Directors சொன்னாங்க.

நான் முந்திக்கொண்டு வழிநடத்தி வேலைகளை பெறும் முதல் வாய்ப்பும் வந்தது.

அன்று பாடல் பதிவு.

 மெலோடி பாடலான நெஞ்சுக்குள்ள யாரு.... நேரில் வந்ததாரு.....
சின்மயி குரலில் பதிவு செய்யப்பட்ட தினம்.

முதல் நாள் இரவு நான் செங்கல்பட்டில் உள்ள என் வீட்டிற்க்கு சென்றுவிட்டு மறுநாள் காலை  நேராக Pal X Studio -ற்கு வந்துக் கொண்டிருக்கையில்  Haresh அண்ணாவிற்கு அவசர அவசரமாக ஒரு SMS செய்து அனுப்பிவிட்டு ஓட்டமும் நடையுமாக மூச்சு வாங்க Studio -வை நெருங்க அப்பொழுது பாடகி சின்மயி Studio விலிருந்து வெளியே வந்த்தைக் கண்டதும் எனக்கு பகீரென்றது.

" ஐயோ Song Recording முடிஞ்சடுச்சா ?"

Studio -ன் உள்ளே சென்ற என்னை இயக்குனர்கள் பார்த்தார்கள்...........!

ஒருவேளை இயக்குனர்களின் Advice -படி அன்று Song Recording ல் நான் நடந்துக்கொண்டிருந்தால் என் கையில்......

-Handy cam இருந்திருக்க வேன்டும்....
-Lyrics printout இருந்திருக்க வேன்டும்....

ஆனால் என்னிடம் லேட்டாக வந்ததுக்கு காரணம் மட்டுமே இருந்தது.

---------------------------------------------------------------------------------------------------------------------------

அப்பொழுது தான் நான் அனுப்பிய SMS Haresh அண்ணன் மொபைலுக்கு
வந்தது.

Hi Anna Today mrng song recordingil nan enna velai seidhu iruka vendum. plz reply me.

மறக்க முடியாத SMS....

சில சம்பவங்கள் நம்மையே நமக்கு அடையாளம் காட்டும்....

Wednesday, October 12, 2011

"அம்புலி 3D" திரைப்பட அனுபவங்கள் -  பகுதி 04

                                                        
                                                                          இசை


 
இங்குதான் எனக்கான காட்சி ஆரம்பம்... பாடல் ஒலிப்பதிவிற்கு முன் Locations வேட்டைக்காக ஊட்டி, கோவை, பொள்ளாச்சி, மேட்டூர் என பல ஊர்களுக்கு சென்று வந்தோம். பயணிக்க தொடங்கி பேச்சு எங்கெங்கோ சென்று ஒரு நாள் ஊட்டி மலைப்பாதையில் எங்களது வேன் சென்றுக்கொண்டிருக்கும்போது Harish அண்ணா என்னிடம் கேட்டார் '' இனக்கு ரிதம் பிடிக்க தெரியுமா என்று ? ''

அது வரையில் வேனில் சத்தமாக ஒலித்துக் கொண்டிருந்த பாட்டு சல வினாடிகள் எனக்கு மட்டும் Mute ஆனது போல் இருந்தது.

நான் : ரிதம் பிடிக்கிறதுன்னா?...
(ஐயோ இதுவரையில் கேட்டிராத கேள்வி...)

தெரியாதுண்ணா........

Harish அண்ணன் : கத்து வச்சிக்கோ தினேஷ்.... Director க்கு இதெல்லாம்           கண்டிப்பா  தெரியனும். தெரியாம நீ எப்படி படம் பண்ணுவ?..... Music directors கிட்ட எப்படி Songs கேட்டு  வாங்குவ.... சீக்கிரம் கத்துக்கோ....

எனக்கு கொஞ்ச நேரத்துக்கு எதுவுமே புரியல. 2005 ல Cine Field-க்குள்ள வந்தேன். இதுவரைக்கும் எனக்கு இசை பத்தி Knowledge கிடையாது.

Hari அண்ணன்:  இங்க பாரு... ரிதம் பிடிக்கிறது ஒண்ணும் பெரிய                  விஷயமில்ல. எந்த Song-அ நீ கேட்டாலும் அது beat-படிதான் Play ஆகும். ஒவ்வொரு Song-லயும் ஒவ்வொரு விதமா              ரிதம்..................................................................................................                                            ..............................................................................................................
..............................................................................................................
Hari அண்ணன் சொல்லிக்கொண்டிருக்கும் போது என் உள்ளுக்குள் மனதில் பயம் ஏக்கர் கணக்கில் பரவ ஆரம்பத்தது விட்டது.

Music -ல நாம எப்டினு சொல்லனுமே உங்களுக்கு..... ஆங்....
சரியா சொல்லனும்னா அந்த கரிக்கடை பாய் இருக்காரே....
அதாங்க அவர்தான்......

                                     ''நின்னுக்கோரே.... வர்னும்..... வர்னும்.......''

அவர் வீட்டுக்கு பக்கத்து வீடுதான் நம்மளது......



Locations Trip முடியற வரைக்கும் எனக்கு மட்டும் தனியாக பாடல் ஒலித்தது போல் இருந்தது. ஒவ்வொரு முறையும் பாடலில் ரிதம் தேடி அலைய ஆரம்பித்தேன்.

Sunday, October 9, 2011

"அம்புலி 3D" திரைப்பட அனுபவங்கள் -  பகுதி 03 





 
மாட்டிக்கொண்ட asst directer -க்கு சற்று வித்தியாசமான தண்டனை தரப்பட்டது. உடனடியாக அந்த asst director ஒரு short film concept சொல்ல வேண்டும்... அதை அவனே direct செய்ய வேண்டும். Team-க்குள்ளேயே Editor, director, Actor, Cameraman  என எல்லோரும் இருப்பதால் சுலபத்தில் தப்பிக்க முடியாது.

பின் அந்த assistant கதை சொல்லி short film எடுக்கறதெல்லாம் ஒரு பக்கம். அம்புலி குழு (அட... அதான் ஆரம்பிச்சாச்சுல.... crew- க்கு பேரே இனி அம்புலிதான்.) சென்னை திரும்பியது. சென்னையில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் வீட்டுக்கும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வீட்டுக்கும் நடுவில் அம்புலி Office போடப்பட்டது.
                                                     (என்ன combination பாருங்க....)

காட்சிகள் ஒவ்வொன்றாய் ஆரம்பித்தன. பாடல் வரிகளுக்கு நா.முத்து குமார், கவிஞர் தாமரை, நெல்லை ஜெயந்தா, பாப் ஷாலினி ( Fairwell Song-ல் வருகிற ஆங்கில வரிகள்) இசைக்கு வெங்கட்பிரபு ஷங்கர், சாம் CS, சதீஷ்,மெர்வின் என 4 இசையமைப்பாளர்கள், ஆடை வடிவமைப்புக்கு திரு பாபு, கலை ஆக்கத்திற்கு திரு ரெமியன் அவர்களும் சண்டைப் பயிற்சிக்கு திரு ரமேஷ் மாஸ்டர் அவர்களும் என அம்புலியை தோளில் சுமக்க சேர்ந்துக்கொண்டனர்.

இப்படி டெக்னிஷியன் பட்டாளம் தயாராகி விட்டது. எல்லாம் சரி....
அம்புலிக்காக இவர்கள் சேர்ந்துக்கொண்டனர். படத்தில் அம்புலியாக சேரப்போவது யார்? கதையின் நாயகன், வில்லன், Entertainer என பல பரிமானங்கள் கொண்ட அம்புலி Charecter -ஐ ஏற்கப்போவது யார் என்ற தேடல் படலம் தொடங்கி விட்டது.

ஒளிப்பதிவாளர் சதீஷ் அம்புலியை அடையாளம் காட்டினார். அவரைப் பார்த்ததும் எங்களுக்கு நம்பிக்கை பிறந்தது. அம்புலி கதாப்பாத்திரத்தை தாங்க கூடிய சரியான நபர்... ஆனால் அவ்வளவு சுலபத்தில் நெருங்க முடியவில்லை...

அவர்.......................................................................

-------------------------------------------------------------------------------------------------------------

"அம்புலி 3D" திரைப்பட அனுபவங்கள் பகுதி 04 -ஐ படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.