Friday, October 8, 2010
Wednesday, April 28, 2010
அழகிகள்
கன்னிக்கதை
பேரூந்தில் பெரும் கூட்டம். நின்றுக்கொண்டெ பயணித்த நான்
ஜன்னலோரம் உட்கார்ந்த அவளை கண்களால் சிறிது நேரம்
கைது செய்தது மணிக்கு பிடிக்கவில்லை.
‘’ ஏண்டா என்ன டேஸ்ட்டுடா உனக்கு?. போயும்போயும் அந்த கருப்பு
ஃபிகர்தானா உன் கண்ணுல பட்டுது?.
‘’ ஏன் மச்சி... அவளுக்கு என்னடா சூப்பர் ஃபிகர்தானடா..’
‘’ டேய் மச்சான் என்னடா ஆச்சு உனக்கு? அவ அட்ட கரியா இருந்தாடா.....’
‘’ இருக்கட்டுமே அவளும் வயசு பொண்னுதான...
அவளுக்கும் பசங்க தன்ன பாக்கனும்னு ஆசை இருக்காதாடா...
இப்டி நாம கருப்பு சிவப்புனு பிரிச்சி பாக்கறதால
அந்த பொண்ணோட மனசு எவ்வளவு கஷ்டப்படும்னு
கொஞ்சம் யோசிச்சு பாருடா ’’
மணி அமைதியானான்...
எனக்கு தெரியும் இனி மணிக்கும் அவள் அழகிதான்......